புகலிடம்!

படம்

அவள் ஒன்றும்

இந்த மர மனங்களிடம்
கனிகளுக்காக -
காத்திருக்கவில்லை.....
அது - தரும்
நிழலுக்காகத்தான்......
காத்திருந்தாள்!

அவள்- கனத்த
இதயத்தில்...
நினைத்த எண்ணங்கள்
சருகாகிப் போனதால்...!

அந்தச் சருகுகளைக்கூட
உரமாக்கி-அந்த மர(மன)ங்கள்
மேலும் ஓங்கி வளர்கின்றன
அதனால்தான்....

இன்று-அவள்
வெயிலினில் கூட...
வெறுப்பின்றி நடக்கின்றாள்

இனி- அவள்
ஒதுங்கப் போவது
எந்த(மர) நிழலிலோ....?
இல்லை
இந்த வெயில் தான்
அவளின்...புகலிடமோ....??
படம்


0 கருத்துகள்:

Post a Comment