கிள்ளை மொழிபேசும்
கள்ளமில்லா உள்ளமதில்
தொல்லையில்லா நினைவுகள்...!
அன்னையவள் ஊட்டும் உணவும்
மடிசாய்த்துக் கதை சொன்ன கதையும்
இவள் சார்ந்த மொழிதனிலே
கிள்ளையிவள் பாவை கொள்ளும்....!
தூக்கம் வரும்போது துணையாகும்
தாக்கம் ஏதுமின்றித் தானிருக்கும்
நோக்கம் இல்லா நேசம் கொள்ள
பாசத்தோடதைப் பார்த்திடுவாள்..!
பள்ளிப் படிப்புகளும் பாடல்களும்
துள்ளும் விளையாட்டுகளும்
அள்ளிக் கொடுக்கும் அணைப்புகளும்
தோழியென்றே பாவை பெறும்....!
அல்லும் பகலும் அருகிருத்தி
அளவிலா இன்பம் பெருக்கி
கண்ணே மணியே யெனும் கொ(கெ)ஞ்சல்
எம்மில் இருந்தே தான் பெற்றாள்.....!
இருந்தும்.....
அப்பாவையாக மாட்டேனா ???
என எண்ணி ஏங்கிப் போகின்றேன்....!