Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

அற்றைத்திங்கள் ..!


ற்றைத் திங்கள் எண்ணமெல்லாம்
பித்தம் கொள்ள வைக்குதடி
இற்றைத் திங்கள் நீ எனக்கில்லை
இதயம் எரிந்து வேகுதடி..!

கற்றை மொழிகள் எத்திசையும்
உந்தன் குரலில் ஒலிக்கிறதே
ஒற்றைச் சொல்லாய்நீ உச்சரித்த
எந்தன்பெயரும் காற்றில் அலைகிறதே...!

உற்றதெல்லாம் தொலைந்தது போல
மிச்சமுள்ள உயிரும் என்னில்
குற்றுயிராய்க் கிடக்குதிங்கே
சொச்சமுள்ள உன் நினைவினாலே...!

பெற்ற முத்தம் காயவில்லை
சொத்தைப் போல சேர்த்து வைத்தேன்
எற்றை நாளும் மாறா நினைவே (யுனை)
நித்தம் நித்தம் சுவாசிக்கின்றேனே...!

வெற்றாய்ப் போன வாழ்வெனது
விருப்பாய்க் கொள்ள ஏதுள்ளது..?
கற்றதெல்லாம் உன்னையன்றி
கருத்தில் ஒன்றும் கருதிடவில்லை..!

ஒற்றைப் பாதையது உன்வாசல் மட்டும்
போகத்தெரிந்த கால்களின்று
பற்றைக்காடு மேடெங்கும் அலைந்து திரிகிறதே
கைகள் கோர்த்த வுன் கரமெங்கே...?

சுற்றம் யாவும் சூழ்ந்திருக்க
சூனிய உலகில் உன்னுடன் நானே
மற்றோர் சிரிப்பில் தெரிந்து கொண்டேன்
மன(ம்)நிலை இன்றி ஆனேனென்று..!


அற்றைத் திங்கள் எண்ணமெல்லாம் 
பித்தம் கொள்ள வைக்குதடி
இற்றைத் திங்கள் எனக்கில்லை 
இதயம் எரிந்து வேகுதடி..! 

அவள் + நான்

சத்தமின்றி வார்த்தை பேசும்
அவள் புன்னகையும் பார்வைகளும்
புதுமொழியாகிட - நானோ
அதன் அகராதியாகின்றேன்...!


927840vf1jlx9jqj.gif book image by farashera927840vf1jlx9jqj.gif book image by farashera927840vf1jlx9jqj.gif book image by farashera927840vf1jlx9jqj.gif book image by farashera927840vf1jlx9jqj.gif book image by farashera927840vf1jlx9jqj.gif book image by farashera927840vf1jlx9jqj.gif book image by farashera927840vf1jlx9jqj.gif book image by farashera



எரித்திடும் தீ யென - என்
அனல்மூட்டும் கோபங்கள்
அடங்கிப் போய்விடும் உன்
மெளனப் பார்வைகளால்...!


fireout.gif FIRE OUT GIF image by tracetagfireout.gif FIRE OUT GIF image by tracetag






துவண்டுவிடுகின்ற நேரத்தில்
துவட்டுகின்ற துணிபோல்
என்மேல் பரவி விடுகின்றாய்
உன்னுள்ளே கசிந்து விடுகின்றேன்
நான்...!

1ac4b3cf.gif love gif 1 image by janu16101ac4b3cf.gif love gif 1 image by janu16101ac4b3cf.gif love gif 1 image by janu16101ac4b3cf.gif love gif 1 image by janu1610





வழியனுப்ப வாசல் வந்து
வரும் வழிபார்த்துக் காத்திருப்பாய்
நானோ...!
என் விழியோடுன்னைத்
தூக்கிச் செல்வேன்...!

BlinkingSilverEyes.gif ~S~ Blinking Silver Eyes image by SylvurFoxx


காத்திருப்பு..!

 



எனது சின்ன இரவொன்றில்
வாடிய மலரொன்று....
ஆம்..அவள்..என்னவள்....


எண்ணத்தில் தாங்காது
நினைவுகளை-தனது
வண்ணத்தில் வாட்டி...
கன்னத்தில் வடிக்கின்றாள்


ஆம்...
அவள் - காத்திருந்து
பூத்துப்போன விழிகள்.......


''கலங்காதே..கொஞ்சம் பொறு''


எத்தனை வார்த்தைகள்
எத்தனை தரம்.....


புளித்துப் போன கதை
புதிதாக என்னவுண்டு......?


விழித்துப்பார்த்தேன்
நனைந்து போன- என்
தலையணை......


ஓ....
எனது நென்சிலும்
ஈரம் உண்டு...........
எனவே
''கலங்காதே....கொஞ்சம் பொறு''

அருகாமை

.

**************************************************





**************************************************
**************************************************






**************************************************
























அழகுக் கவிதை..!


படம்
உன்னை நினைத்து
எழுதிப் பார்த்தேன்...
வார்த்தை வரவில்லை
இன்னும் முயன்று பார்த்தேன்...

முடிவாய் ஒரு சொல்
அது என் தேவதை !

ஆம்.....
அழகுக் கவிதை
அது உன் பெயர்தானடி!


படம்


காதல் ப் “பா” (வெண்பா)









என்றாய் யெனதுயிர் நீயென்றாய் யுன்மனதைத்
தந்தாய் யெனதுதாய் போலானாய் - வந்தாய்
வழமான வாழ்வெனக்குத் தந்தாய் தனியாய்த்
தவித்திருந்த போதுதுணை நீயானாய், வென்றாய்
மனமெனதை நன்றாய் வழிநடத்திச் சென்றாய்
எனக்காக எல்லாம்தந் தாய்..!

**********************************************

காண்பாயே காலமும் கரைந்தே தொடர்கிறதே
வேண்டாத போதும் வந்திடும் - முதுமையிலும்
என்னன்பும் சேர்ந்தே தொடர்ந்திடும் முன்னையே
என்றுமெனை ஏற்பாயா நீ...?!


***********************************************
பார்வையாலும் சொல்வாய்யுன் காதலை ஊமையாய்
பாராத போதும் நினைவாவாய் -தீராத
நோய்போலவுன்னினைவால்தேய்ந்தாலும்வாழ்விக்கும்
மூலிகையாய் நெஞ்சினில் நீ..!

**********************************************

நீயே நினைவாவாய் நீங்காமல் என்னிழலாய்ச்
சேர்ந்தே தொடர்ந்து நிஜமாவாய் - வார்த்தையில்
சொல்ல முடியாத உண்மை உணர்வாய்
இருப்பாயே என்னிலென்றும் நீ...!


***********************************************

உள்வாங்கும் காற்றின் சுவாசமுன் வாசமே
கள்போலக் காதல் களிப்பூட்டும் - உள்ளேறும்
மூச்சோடும் காற்றாகிக் காதல் உயிர்ப்பூட்டும்
பேச்சோடும் மூச்சோடும் நீ.....!

***************************************************



தாக்கம்

ஏக்கம்


















நிலவதனைத் தழுவிநின்ற
முகிலவன் -ஏன்
கண்ணீரைச் சொரிகின்றான்
இன்று
மதியதனைக் காணாமல்
அவனும் (நிம்) மதியிழந்து போனானோ...??