கையற்ற பொம்மை





அனல்கக்கும் கூரைகள் பற்றும்
அடைக்கலம் தேடியே குழிபுக
அமிலமாய் எந்திரப் பறவைகள் 
எச்சமிடும்…..!


உயிர் வாடி வதங்கிட மெலியும்
உடலும் தாங்கித் தன் தாயும் சேயென
உறவினைக் காத்திட ஓடிடும் ஓட்டம்
உலகும் பார்க்கும்..!


நோய் தொற்றும் நீரின்றி நினைவுகெடும்
வான் கிழித்துப் பெய்யும் மழை
ஈயமாய் உடல்கிழித்து உயிர்குடிக்க
பாலின்றிப் பரிதவித்த பிள்ளை 
தாயிறந்த தறியாதே காய்ந்த முலை
சப்பும்..!


வேல்வந்து வினை தீர்க்கும் 
உமை வந்து அமுதூட்டும் எமை
“பார்”வந்து உயிர்மீட்கும் எனப் பார்த்திருக்க
கையற்ற பொம்மை யாயிருக்கும்

உலகில் மனிதம்! :pale: