விருட்சம்.





தேனுண்ணும் வண்டிலும்
தென்றலின் தேரிலும்
பயணம் செய்வேன்!
பூக்களைக் கருவாக்கி
கனிகளின் விதைகளின்
கருவறையில் சிறையுறுவேன்...!

மனிதனும் பற் பல மிருகமும்
கனிகளின் சதைகளை உண்டபின்
பூமியில் புதை படுவேன்....!

காலத்தின் வருகைக்காய்
கனகாலம் காத்திருந்து
கருவறைச் சிறை உடைத்து
பூமியை பிளந்தெழுவேன்...!

வீரிய வேர்களின் வேதனையிலும்
வானத்தை நோக்கி தலை நிமிர்வேன்!
மண்ணினில் உயிர்களின் வாழ்வுக்கும்
விண்ணினில் மழை மேகம் கூடுதற்கும்
நான் தான் வழி சமைப்பேன்...!

என் கிளைகள் பரவும்
கிளைகளில் இருந்தும்
விழுதுகள் தோன்றும்!
வேர்கள் வியாபித்து
வெளிவந்து குட்டிகள் ஈணும்...!

பூத்துக் காய்த்து கனிதந்து
விதை கொண்டுமென்
சந்ததி வழரும் - நான்
விருட்சம்!!!

0 கருத்துகள்:

Post a Comment