நியதி..!




பூட்டிய வீட்டுக்குள்
புளுங்கிக் கொண்டிருந்தேன்.....

காற்றினைத்தேடி
கதவினைத் திறந்தேன்......
வந்தது காற்று !

ஒரு முறை.....

பூஞ் சோலையில் புகுந்து
பூக்களில் புரண்டு
புதுத் தென்றலாய் மிதந்து
(பூ) வாசனையோடு...
வாசலில்- வந்தது !

மறுமுறை.......

சாக்கடையில் புகுந்து
சகதிகளில் நனைந்து
நாற்றத்தைச் சுமந்தபடி....
வாசலில்- வந்தது !

மறுமுறை......

கோவிலில் புகுந்து
தீபத்தில் எரிந்து
தூபத்துள் புகைந்து
தெய்வீக வாசனையாய்.....
வாசலில்- வந்தது !

ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு விதமாய்
ஒவ்வொரு காற்று......
வாசலில்- தேடி வரும்.....!

ஒவ்வொரு காற்றைப் போல்
ஒவ்வொரு விதமாய்
ஒவ்வொரு மனிதர்....
வாசலில்- தேடி வரும்....!



ஒவ்வொரு காற்றையும்
சுவாசிக்கப் பழகுதல் போல்...
ஒவ்வொரு மனிதரையும்-
நேசிக்கப் பழகவேண்டும்...!




0 கருத்துகள்:

Post a Comment