முடிவு முடிவல்ல.

பூக்கள் மடிந்ததாய்
மனம் வாடாதே..!

பூக்கள் மடிந்ததால்
காய்கள் உருவாகி
கனியாகி ... விதையாலே
விருட்சம் உருவாகும்...!

அத்தனை விருட்சமும்
எத்தனை பூக்கள் தரும்..!!?
பூரிப்புக் கொள்..!!

சூரியன் மறைந்ததாய்
மனம் வருந்தாதே..!

சூரியன் மறைந்தால்
சந்திரன் உருவாகி
நட்சத்திரம் பூக்கும்..!

விடி வெள்ளி முளைத்து
விடியல் கொண்டு வரும்...!

விடியல் உனக்கு
புது நாளைக் கொண்டு வரும்.!
விழித்துக் கொண்டே
புது நாளை ஆரம்பி...!

மறந்துவிடாதே .....

தொடக்கங்கள் யாவும்
முடிவு பெறும் ..!

அந்த முடிவினில் கூட
புதிய தொடக்கம்
காத்திருக்கும்...!!

முடிவைப் பற்றி
கவலைப்படாதே

தொடர்ந்திடு.....
புதிய ஆரம்பத்திற்காக...!!!

0 கருத்துகள்:

Post a Comment