இழப்புகளும் வளற்சிக்கே.....





















வளர்ந்து விட்ட தென்னை
வாடியது-தன்
உடலைப்பார்த்து!

தான் இழந்துவிட்ட
ஓலைகள் எத்தனை...
எண்ணிப் பார்த்தது
வடுக்களை...



கீழே வீழ்ந்து விட்ட
ஓலையொன்று
ஆறுதல் சொன்னது!



வந்து போகும்
சொந்தம் யாவும்
நிலைப்பதில்லை
எனது வீழ்ச்சியிலும்
உனக்கு வளர்ச்சியுண்டு!



இழப்பின் வடுவை-நீ
பாராதே....
தவித்திருக்கும்-மானிடர்கு
இளனீர் கொடு...!

உன் பிறப்பின் நோக்கை
அறிந்துவிடு...


அதனால் வடுவை பாராதே
வானை நோக்கி-இன்னும்
வளர்ந்து விடு..!

0 கருத்துகள்:

Post a Comment