காலக் கண்ணாடி



பிறந்து வளர்ந்து வளமாய்

வாழ வழி தேடி
நாளும் கிளமை பாரா
நோயும் நொடியும் உணரா
வேலை பலவும் செய்து....

இணையாய்த் துணையும் தேடி
(அவள்) வரவால் கருவுருவாக்கி
சேயும் பிறக்க வைத்து....


வளரும் சேய்க்கு மென்றும்
வசதிகள் செய்ய வென்றும்
மாய்ந்தே பொருட்கள் தேடிப்...

பின் -

களைத்துக் கை கால் முகம் கழுவி
துடைத்துக் கண்ணாடி பார்த்தால்
வெளுத்த முடியும்
சுருங்கிய தோலுமாய்
காட்டு மென் பிம்பம்...!

ஏதோ குறைவதாய்
திரும்பிப் பார்க்கின்றேன்

என் நினைவுக் குழந்தைகள் - கைகளில்
விளையாட்டும் பொருளாய்
என் வாழ்வு விசும்பலுடன்....!












1 கருத்துகள்:

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஏதோ குறைவதாய்
திரும்பிப் பார்க்கின்றேன்

என் நினைவுக் குழந்தைகள் - கைகளில்
விளையாட்டும் பொருளாய்
என் வாழ்வு விசும்பலுடன்....!

ஏதோ நெஞ்சை நெருடுகிறது பாலன் சார்.

Post a Comment