நெஞ்சே நீ நில்லு !






நெஞ்சே நீ நில்லு
இனி போகுமிடம்
ஏது சொல்லு..?


கனவுகளில் வாழ்கின்றாய்
கற்பனையில் மாழ்கின்றாய்
நினைவுகளில் சாகின்றாய்
நான் போகுமிடம் போக
ஏனோ முரண்டு பிடிக்கின்றாய்...?


கண்ணிமைக்கும் நேரத்தில்
காததூரம் போகின்றாய் -நான்
முன்நோக்கிப் போகையில்
நீயோ பின்னோக்கிப் போகின்றாய்....
இருக்கும் இடம் விட்டு
எங்கே நீ போகின்றாய்....?




நாம் போகுமிடம் போக
உனை நானும்
எனை நீயும் கூட்டிச்செல்ல
நெஞ்சே நீ நில்லு.....!




0 கருத்துகள்:

Post a Comment