மே 18
அழுதழுது தொழுதோம்
விழி நீரில் கரைந்தோம்
பொழுதொன்று போகையில்
விழும் உயிர்கள் பல நூறு..!
வேதனையில் விம்மினோம்
வீதிவரை கதறினோம்
காதுகொடுத்துக் கேட்போர்
மேதினியில் யாருமில்லை..!
குலைகுலையாய் கொத்துக்குண்டு
வகை தொகையாய் பொஸ்பரஸ்
வலையம் இதுதான் பாதுகாப்பென்றே
கொலையைச் செய்தார் கொடுமரசு...!
தட்டிக்கேட்பார் யாருமில்லை
தட்டிக் கொடுத்தார் இனவழிப்பை
தொட்டிப் பிள்ளையைக் கூட
விட்டு வைக்க வில்லை...!
மரணம் அன்று தமிழன் (மட்டும்)அன்று
மரணித்தது மனிதம் உலகிலென்றே
உரத்துச் சொல்லி உரிமை கேட்போம்
வரட்டும் தமிழீழம் என்றே..!
வலியுடன் சுமக்கும் நினைவில் இன்று ஒருவருடம் முடிவில்
இறுதிக்கட்டப் போரில் இழந்த மக்கள் போராட்ட வீரர்கள் அனைவரிற்கும் எனது அஞ்சலியைச் செலுத்துகின்றேன் அவர்கள் ஆத்ம சாந்திக்காக வேண்டுகின்றேன்.
பூச்சாண்டி..!
கிறுக்கியது
Unknown
on 12 May 2010
விஞ்சும் சிரிப்பினிலும்
கொவ்வையிதழ் பேச்சினிலும்
அயல் வீட்டுப் பிள்ளையென்னைக்
கொள்ளை கொண்டு போனதுண்டு!
பிஞ்சுக் கரம் பிடித்து
பஞ்சு மேனி தூக்கிக்
கொஞ்சிவிட ஆசை கொண்டு
அண்டை வீடு சென்றபோது..
அமுதைப் பிசைந்து கொண்டு
“ஆ” காட்டு என்று சொல்ல
அடம்பிடித்த பிள்ளைக்கு ...
“அதோ பார் அடுத்த வீட்டு
மாமா வாரார் - உன்னைக்
கொண்டு போகப் போறார்”
என்றே அன்னை சொல்ல....
என்றே அன்னை சொல்ல....
விக்கித்துப் போன பிள்ளை
“ஆ” வென்று வாய் திறக்க
பருக்கைகள் திணிக்கும் போதே
வெக்கித்துப் போய் வீடு வந்தேன்!
அடுக்கடுக்காய்ப் பலப்பல
பலபேரும் திணித்துவிட்ட
முகமூடி ஒவ்வொன்றாய்
உரித்துரித்துப் பார்க்கின்றேன்..!
பயமாய்த்தான் இருக்கிறது- நான்
“பூச்சாண்டி!”

Subscribe to:
Posts (Atom)