மே 18


அழுதழுது தொழுதோம்
விழி நீரில் கரைந்தோம்
பொழுதொன்று போகையில்
விழும் உயிர்கள் பல நூறு..!

வேதனையில் விம்மினோம்
வீதிவரை கதறினோம்
காதுகொடுத்துக் கேட்போர்
மேதினியில் யாருமில்லை..!

குலைகுலையாய் கொத்துக்குண்டு
வகை தொகையாய் பொஸ்பரஸ்
வலையம் இதுதான் பாதுகாப்பென்றே
கொலையைச் செய்தார் கொடுமரசு...!

தட்டிக்கேட்பார் யாருமில்லை
தட்டிக் கொடுத்தார் இனவழிப்பை
தொட்டிப் பிள்ளையைக் கூட
விட்டு வைக்க வில்லை...!

மரணம் அன்று தமிழன் (மட்டும்)அன்று
மரணித்தது மனிதம் உலகிலென்றே
உரத்துச் சொல்லி உரிமை கேட்போம்
வரட்டும் தமிழீழம் என்றே..!






வலியுடன் சுமக்கும் நினைவில் இன்று ஒருவருடம் முடிவில்
இறுதிக்கட்டப் போரில் இழந்த மக்கள் போராட்ட வீரர்கள் அனைவரிற்கும் எனது அஞ்சலியைச் செலுத்துகின்றேன் அவர்கள் ஆத்ம சாந்திக்காக வேண்டுகின்றேன்.