Showing posts with label வாழ்க்கை / சமுதாயம். Show all posts
Showing posts with label வாழ்க்கை / சமுதாயம். Show all posts
பற்றும் கொடி..!
நெடுந் துயர் வளர்ந்திடும் மரமும்
விழுதெனப் படர் பெரு விருட்சமும்
விழும் திசைக் காற்றினில் தலையசை
செடியுடன் நிலம் படர்ந்தொரு கொடியென்
வீட்டுக் கொல்லையில்...!
பிடி மண் மீதொரு பிடிப்பின்றி
அலைந்திடும் கொடியது அணைப்பினில்
நெடுந்துயர் மரமது கனிந்தது
இனியதன் வாழ்வும் இனிதெனக்
கொடியதன் அணைப்பினில் கொண்டது..!
கொடிவேர் மரமதில் பற்றிடப்
பிடியதன் வாயினில் கரும்பென
கொடுமையாய் ஆனது மரமும்
கொழு கொம்பெனப் போனது..!
பிடிப்புடன் பற்றிடும் யாவும்
உற்ற நல் பற்றல்ல
பிடிப்பது பிணிதரும் போதினில்
பாரற்றுப் போய்விடும் மரமும்..!
மனமும்...!
புறக்கணிப்பு
பகல் முடித்துப் போகும்
பொழுதிடைச் சூரியனின்
அகல் துடைத்து வரும் தென்றல்
கூவும் குயிலொன்றின்
ஓசை சுமந்துவரும் பொழுதினில்.....
(உன்)மனக் கூண்டிலிருந்து
ஒதுக்கப் பட்ட வேதனை
என் நிழலையும்
உண்டுவிட்ட இறுமாப்பில்
இருளாய் என்மீது பரவும்.!
மனந் தேடித் தலைகீழாய்
தவம் செய்தும்
பலனொன்றும் இன்றி
வரமான மெளனங்களுடன்....
குரலிழந்த வெளவாலாய்
சிறகிருந்தும் பறப்பதற்கு
வழிதேடித் தவிக்கின்றேன்...
(நான்)மோதி வீழும் இடங்களில்
தாங்கிக் கொள்ளக்
கரமொன்று - எனக்காகக்
கிடைத்து விடக் கூடாதா..??
திருவிழா
மங்கள வாத்தியமும் முளங்க
ஊரே ஒன்றாகக் கூடி
அழகாகக் காட்சிதரும் திருவிழா.!
என்றோ வைத்த நேர்த்திக்காய்
காவடியெடுத்த தந்தையரின்
தோள்களில் நன்றிக்கடனுடன்
கால்களின் ஆனந்த தாண்டவம்..!
அன்னையர்கள் பால்ச் செம்பில்
வளமான வாழ்விற்கான
நம்பிக்கை ததும்பும்...
எதையும் அறியாது
வளையல் கடை பார்த்து
கண்கசக்கும் தங்கையும்
பஞ்சுமிட்டாய் கேட்டு
அடம்பிடித்தபடி நானும்..!
எங்கள் சிணுங்கலையும்
மீறிய ஒலி பெருக்கி அறிவிப்பு
தொலைந்து விட்ட பிள்ளைகளின்
பெற்றோரைத் தேட ....
உடைந்து விடாதபடி
அத்தனையும் பார்த்து
உலாவரும் ரதத்தில்
சற்றும் சலனமின்றி
தெய்வம் அமர்ந்திருக்கும்...!
திருந்தாத (து) மனது!
திரைகளில் போட்டிடும்
படங்கள் கதையென
உள்ளம் அறியும் - இருந்தும்
கதையினில் வருகின்ற
காட்சிகள் கண்டே.....
கன்னத்தில் ஈரம் வடியும் !
இதுபோல்...
வாழ்வினில் ஆடிடும் ஆட்டம்
அதற்காய் போட்டிடும் வேஷம்.....
நாடகமென்றே
உள்ளம் உணர்ந்தும் -பின்
மனதினில் திரைகள் மூடும்
இருந்தும்
உள்ளே இருந்தொரு மிருகம்
மெல்ல விலக்கிப் பார்க்கும்...
விழிகளின் திரைகள்
மூடும் - இருந்தும்
விழிகளில் கரைகளை
உடைத்தே வெள்ளம் ஓடும்....!!
நெஞ்சே நீ நில்லு !
நெஞ்சே நீ நில்லு
இனி போகுமிடம்
ஏது சொல்லு..?
கனவுகளில் வாழ்கின்றாய்
கற்பனையில் மாழ்கின்றாய்
நினைவுகளில் சாகின்றாய்
நான் போகுமிடம் போக
ஏனோ முரண்டு பிடிக்கின்றாய்...?
கண்ணிமைக்கும் நேரத்தில்
காததூரம் போகின்றாய் -நான்
முன்நோக்கிப் போகையில்
நீயோ பின்னோக்கிப் போகின்றாய்....
இருக்கும் இடம் விட்டு
எங்கே நீ போகின்றாய்....?
நாம் போகுமிடம் போக
உனை நானும்
எனை நீயும் கூட்டிச்செல்ல
நெஞ்சே நீ நில்லு.....!
காலக் கண்ணாடி
பிறந்து வளர்ந்து வளமாய்
வாழ வழி தேடி
நாளும் கிளமை பாரா
நோயும் நொடியும் உணரா
வேலை பலவும் செய்து....
இணையாய்த் துணையும் தேடி
(அவள்) வரவால் கருவுருவாக்கி
சேயும் பிறக்க வைத்து....
வளரும் சேய்க்கு மென்றும்
வசதிகள் செய்ய வென்றும்
மாய்ந்தே பொருட்கள் தேடிப்...
பின் -
களைத்துக் கை கால் முகம் கழுவி
துடைத்துக் கண்ணாடி பார்த்தால்
வெளுத்த முடியும்
சுருங்கிய தோலுமாய்
காட்டு மென் பிம்பம்...!
ஏதோ குறைவதாய்
திரும்பிப் பார்க்கின்றேன்
என் நினைவுக் குழந்தைகள் - கைகளில்
விளையாட்டும் பொருளாய்
என் வாழ்வு விசும்பலுடன்....!

முட்டை
முட்டை
வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!
சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!
சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!
செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!
இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!
வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!
சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!
சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!
செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!
இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!
நியதி..!
பூட்டிய வீட்டுக்குள்
புளுங்கிக் கொண்டிருந்தேன்.....
காற்றினைத்தேடி
கதவினைத் திறந்தேன்......
வந்தது காற்று !
ஒரு முறை.....
பூஞ் சோலையில் புகுந்து
பூக்களில் புரண்டு
புதுத் தென்றலாய் மிதந்து
(பூ) வாசனையோடு...
வாசலில்- வந்தது !
மறுமுறை.......
சாக்கடையில் புகுந்து
சகதிகளில் நனைந்து
நாற்றத்தைச் சுமந்தபடி....
வாசலில்- வந்தது !
மறுமுறை......
கோவிலில் புகுந்து
தீபத்தில் எரிந்து
தூபத்துள் புகைந்து
தெய்வீக வாசனையாய்.....
வாசலில்- வந்தது !
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு விதமாய்
ஒவ்வொரு காற்று......
வாசலில்- தேடி வரும்.....!
ஒவ்வொரு காற்றைப் போல்
ஒவ்வொரு விதமாய்
ஒவ்வொரு மனிதர்....
வாசலில்- தேடி வரும்....!
ஒவ்வொரு காற்றையும்
சுவாசிக்கப் பழகுதல் போல்...
ஒவ்வொரு மனிதரையும்-
நேசிக்கப் பழகவேண்டும்...!

புகலிடம்!
அவள் ஒன்றும்
இந்த மர மனங்களிடம்
கனிகளுக்காக -
காத்திருக்கவில்லை.....
அது - தரும்
நிழலுக்காகத்தான்......
காத்திருந்தாள்!
அவள்- கனத்த
இதயத்தில்...
நினைத்த எண்ணங்கள்
சருகாகிப் போனதால்...!
அந்தச் சருகுகளைக்கூட
உரமாக்கி-அந்த மர(மன)ங்கள்
மேலும் ஓங்கி வளர்கின்றன
அதனால்தான்....
இன்று-அவள்
வெயிலினில் கூட...
வெறுப்பின்றி நடக்கின்றாள்
இனி- அவள்
ஒதுங்கப் போவது
எந்த(மர) நிழலிலோ....?
இல்லை
இந்த வெயில் தான்
அவளின்...புகலிடமோ....??
சுயம் + நலம்

சுயம் + நலம்
நட்டு வைத்த பூச்செடிக்கு
பாத்தி கட்டி
பசளை இட்டு நீர் விடுவேன்!
துளிர்விடும் அரும்பு பார்த்து
என் முகம் மலர்வேன்.....!
காட்டு வழி போகையிலும்
பல செடிகள் பார்ப்பேன்!
தானாய் முளைகளிட்டு
பரந்து வளர்ந்து நிக்கும்....!
நான் வைத்த செடிக்குமட்டும்
நான்தான் நீர் விடணும்
நெருப்பு வெயில் கண்டால்....
முகமெல்லாம் வாடிநிற்கும்!
அதற்கும் நான் தான்
நிழல் தரணும்..!
என்றாலும் வளர்க்கின்றேன்
அச்செடியை -
என் வீட்டின் அண்டையிலே!
வளர்ந்த பின்னால் ...
கனிதரும் என்றும் !
களைத்தபின்னால் - நான்
இளைப்பாற இடந்தருமென்றும்...!
அக்க(றை)ரை

மஞ்சல் வானம் கொஞ்சம் இறங்கி
கடல் மேனி தழுவ
செங்கதிர் மறைந்தது கண்டு
வெண் பிறை முளைக்க...
அந்த அந்தி வேளையில்
எந்தன் சிந்தை அக்கரை நினைத்தது..!
எதிர் காற்றும் அலையும்
மாறி.. மாறி அடிக்க
துடுப்பை வலித என் கைகள்
களைப்பினால் வலிப்பினும்- மனம்
அக்கரை ஆசையில்
மேலும்... மேலும் (துடுப்பை) வலித்தது..!
நடுக் கடல் அடைந்ததும்
சீறிய அலை ஒன்று
என் துடுப்பை இழுத்துப் போக .. !
அக்கரை இனி எப்படிப் போவதென.?
என் மனம் அலைக்கழிய..!
அலை கடல் மீதினில்
நீந்திடத் தெரியா - நான்
காற்றினின் திசையினில் போவதாய்
பாய்மரம் விரிக்கிறேன்.....!
இனி நான் சேர்வது
எக்கரை மீதிலோ ..?
அக் கரை மீதினில்
அக்கறையாய் இருந்திடணும்..!!!
கடல் மேனி தழுவ
செங்கதிர் மறைந்தது கண்டு
வெண் பிறை முளைக்க...
அந்த அந்தி வேளையில்
எந்தன் சிந்தை அக்கரை நினைத்தது..!
எதிர் காற்றும் அலையும்
மாறி.. மாறி அடிக்க
துடுப்பை வலித என் கைகள்
களைப்பினால் வலிப்பினும்- மனம்
அக்கரை ஆசையில்
மேலும்... மேலும் (துடுப்பை) வலித்தது..!
நடுக் கடல் அடைந்ததும்
சீறிய அலை ஒன்று
என் துடுப்பை இழுத்துப் போக .. !
அக்கரை இனி எப்படிப் போவதென.?
என் மனம் அலைக்கழிய..!
அலை கடல் மீதினில்
நீந்திடத் தெரியா - நான்
காற்றினின் திசையினில் போவதாய்
பாய்மரம் விரிக்கிறேன்.....!
இனி நான் சேர்வது
எக்கரை மீதிலோ ..?
அக் கரை மீதினில்
அக்கறையாய் இருந்திடணும்..!!!
Subscribe to:
Posts (Atom)

