Showing posts with label புத்துயிர். Show all posts
Showing posts with label புத்துயிர். Show all posts

இழப்புகளும் வளற்சிக்கே.....





















வளர்ந்து விட்ட தென்னை
வாடியது-தன்
உடலைப்பார்த்து!

தான் இழந்துவிட்ட
ஓலைகள் எத்தனை...
எண்ணிப் பார்த்தது
வடுக்களை...



கீழே வீழ்ந்து விட்ட
ஓலையொன்று
ஆறுதல் சொன்னது!



வந்து போகும்
சொந்தம் யாவும்
நிலைப்பதில்லை
எனது வீழ்ச்சியிலும்
உனக்கு வளர்ச்சியுண்டு!



இழப்பின் வடுவை-நீ
பாராதே....
தவித்திருக்கும்-மானிடர்கு
இளனீர் கொடு...!

உன் பிறப்பின் நோக்கை
அறிந்துவிடு...


அதனால் வடுவை பாராதே
வானை நோக்கி-இன்னும்
வளர்ந்து விடு..!

விருட்சம்.





தேனுண்ணும் வண்டிலும்
தென்றலின் தேரிலும்
பயணம் செய்வேன்!
பூக்களைக் கருவாக்கி
கனிகளின் விதைகளின்
கருவறையில் சிறையுறுவேன்...!

மனிதனும் பற் பல மிருகமும்
கனிகளின் சதைகளை உண்டபின்
பூமியில் புதை படுவேன்....!

காலத்தின் வருகைக்காய்
கனகாலம் காத்திருந்து
கருவறைச் சிறை உடைத்து
பூமியை பிளந்தெழுவேன்...!

வீரிய வேர்களின் வேதனையிலும்
வானத்தை நோக்கி தலை நிமிர்வேன்!
மண்ணினில் உயிர்களின் வாழ்வுக்கும்
விண்ணினில் மழை மேகம் கூடுதற்கும்
நான் தான் வழி சமைப்பேன்...!

என் கிளைகள் பரவும்
கிளைகளில் இருந்தும்
விழுதுகள் தோன்றும்!
வேர்கள் வியாபித்து
வெளிவந்து குட்டிகள் ஈணும்...!

பூத்துக் காய்த்து கனிதந்து
விதை கொண்டுமென்
சந்ததி வழரும் - நான்
விருட்சம்!!!

முடிவு முடிவல்ல.

பூக்கள் மடிந்ததாய்
மனம் வாடாதே..!

பூக்கள் மடிந்ததால்
காய்கள் உருவாகி
கனியாகி ... விதையாலே
விருட்சம் உருவாகும்...!

அத்தனை விருட்சமும்
எத்தனை பூக்கள் தரும்..!!?
பூரிப்புக் கொள்..!!

சூரியன் மறைந்ததாய்
மனம் வருந்தாதே..!

சூரியன் மறைந்தால்
சந்திரன் உருவாகி
நட்சத்திரம் பூக்கும்..!

விடி வெள்ளி முளைத்து
விடியல் கொண்டு வரும்...!

விடியல் உனக்கு
புது நாளைக் கொண்டு வரும்.!
விழித்துக் கொண்டே
புது நாளை ஆரம்பி...!

மறந்துவிடாதே .....

தொடக்கங்கள் யாவும்
முடிவு பெறும் ..!

அந்த முடிவினில் கூட
புதிய தொடக்கம்
காத்திருக்கும்...!!

முடிவைப் பற்றி
கவலைப்படாதே

தொடர்ந்திடு.....
புதிய ஆரம்பத்திற்காக...!!!